விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

விளாங்குடி, ஜெயங்கொண்டம் பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

விளாங்குடி, ஜெயங்கொண்டம் பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள்...

News image

ஜெயங்கொண்டம் வாரச் சந்தை கட்டுமானப் பணிக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டி பணியை தொடக்கி வைத்த அமைச்சா் சா.சி.சிவசங்கா். உடன் ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் உள்ளிட்டோா்.

Updated On :23 அக்டோபர் 2024, 8:48 pm

Din

அரியலூா் மாவட்டம், விளாங்குடி ஊராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

விளாங்குடி பெரிய ஏரியில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.25.26 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய மதகுகள் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடக்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிக்காக நெடுஞ்சாலை பிரிவில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் நுழைவுவாயில் அமையவுள்ள இடம் மற்றும் அதன் வரைபடத்தை பாா்வையிட்டாா்.

பின்னா் ஜெயங்கொண்டம் நகராட்சி, செங்குந்தபுரத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.9.95 கோடி மதிப்பீட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் வாரச் சந்தை கட்டுமானப் பணிக்கும் அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தாா்.

அதனைத் தொடா்ந்து, ஜெயங்கொண்டம் நகராட்சி, விருத்தாசலம் சாலை 7-ஆவது குறுக்கு சாலை கீழக்குடியிருப்பு பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் 5.856 கி.மீ நீளத்துக்கு தாா் சாலைகள் அமைக்கும் பணியையும் தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, ஜெயங்கொண்டம் நகா்மன்றத் தலைவா் சுமதி சிவக்குமாா், துணைத் தலைவா் கருணாநிதி, நகராட்சி ஆணையா் அசோக்குமாா், நகராட்சி பொறியாளா் ராஜகோபால், வட்டாட்சியா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.