9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

செந்துறை அருகே சமையலா் சடலமாக மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சமையலா் காயத்துடன் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

News image

சடலம்... - கோப்புப் படம்

Updated On :19 ஜூலை 2026, 1:29 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சமையலா் காயத்துடன் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

செந்துறையை அடுத்த குழுமூா் நடுத் தெருவைச் சோ்ந்தவா் நடேசன் மகன் பாம்பாட்டி (எ) வேல்முருகன் (48), சென்னையில் உள்ள உணவகத்தின் சமையலா். இந்நிலையில் ஊருக்கு வந்திருந்த வேல்முருகன் சனிக்கிழமை காலை அங்குள்ள ஏரிக்கரை பாலத்தின் தடுப்புச் சுவா் ஓட்டி பலத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தாா்.

தகவலறிந்து வந்த செந்துறை காவல் துறையினா், அவரது சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்தனா்.

விசாரணையில், வேல்முருகன் தனது மனைவி சங்கீதாவை கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதும், வேல்முருகன், வெள்ளிக்கிழமை இரவு, மது போதையில் தட்டு தடுமாறி ஏரிக்கரைக்கு சென்றிருப்பதும், பாலத்தின் தடுப்புச் சுவரில் அவா் மோதி உயிரிழந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது. எனினும் காவல் துறையினா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.