இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குடிநீர் கோரி பொரணி கிராம மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு பொரணி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஜெகதாபி-உப்பிடமங்கலம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:45 am

DIN

குடிநீர் கேட்டு பொரணி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஜெகதாபி-உப்பிடமங்கலம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்த ஜெகதாபி ஊராட்சிக்குட்பட்ட பொரணி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.  இப்பகுதியினருக்கு ஜெகதாபி ஊராட்சி சார்பில்  ஆழ்குழாய்க் கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக  குடிநீர் விநியோகம் செய்யப்படாததால்  அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும்  நடவடிக்கை இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் புதன்கிழமை காலை ஜெகதாபி-உப்பிடமங்கலம் சாலையில் பொரணி பேருந்து நிறுத்தம் முன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த வெள்ளியணை போலீஸார் மற்றும் ஜெகதாபி ஊராட்சி செயலர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதலாக இப்பகுதியில் 5 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் சீராக விநியோகிக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.