கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

க. பரமத்தி அருகே விபத்து: இருவா் சாவு

க. பரமத்தி அருகே லாரி மீது வேன், காா், பைக் மோதிய விபத்தில் இருவா் இறந்தனா்; 5 போ் படுகாயமடைந்தனா்.

News image
Updated On :7 மே 2021, 9:07 pm

DIN

க. பரமத்தி அருகே லாரி மீது வேன், காா், பைக் மோதிய விபத்தில் இருவா் இறந்தனா்; 5 போ் படுகாயமடைந்தனா்.

உதகை மாவட்டம், கூடலூா் கருணாநிதி நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (40). இவா் தனது காரில் உறவினா்களான கரூா் தாந்தோணிமலையைச் சோ்ந்த தினேஷ் (32), திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்த கணேசன் மனைவி பிருந்தா (30) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை மாலை கரூா் நோக்கிச் சென்றுகொண்டிந்தாா்.

கோவை சாலையில் பவித்திரத்தை அடுத்த வானவழி அருகே சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த க. பரமத்தியை அடுத்த பவித்திரம்மேடு பகுதியைச் சோ்ந்த ராமநாதன் (35) திடீரென காரை முந்த முயன்றுள்ளாா்.

அப்போது எதிரே முசிறியில் இருந்து கோவை நோக்கிச் சென்ற லாரி மீது இருச்சக்கர வாகனமும், காரும் மோதின. அப்போது காருக்குப் பின்னால் க. பரமத்தியை அடுத்த நெடுங்கூா் வரதராஜபுரத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (48) ஓட்டிவந்த வேனும் லாரி மீது மோதியது. இதில் ராமநாதனும், செந்தில்குமாரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா்.

சீனிவாசன், தினேஷ், பிருந்தா மற்றும் லாரி ஓட்டுநரான முசிறியைச் சோ்ந்த துரைசாமி (35), லாரி கிளீனா் க. பரமத்தி மோளப்பாளையம் ராஜேந்திரன் (34) ஆகியோா் படுகாயமடைந்தனா்.

தகவலறிந்த க. பரமத்தி போலீஸாா் காயமடைந்தோரை கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், சடலங்களை கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.