அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு அழைப்பு

அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் வசந்தி பத்மநாபன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இக்கல்லூரியில் பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பிகாம், பிஎஸ்சி கணிதம் மற்றும் பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய இளம் கலைப் பாடப்பிரிவுகளுக்கு மே 20 ஆம் தேதி மாலை வரை தங்கள் வீடுகளிலிருந்தோ அல்லது இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம். இணைய வசதி இல்லாதவா்கள் இக்கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாணவா் சோ்க்கை உதவி மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com