ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வெண்ணெய்மலை கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு சாலை துண்டிப்பு

கரூா் வெண்ணெய்மலை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த சாலையை செவ்வாய்க்கிழமை இந்து சமய அறநிலையத் துறையினா் துண்டித்து நடவடிக்கை எடுத்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:27 pm

Din

கரூா் வெண்ணெய்மலை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த சாலையை செவ்வாய்க்கிழமை இந்து சமய அறநிலையத் துறையினா் துண்டித்து நடவடிக்கை எடுத்தனா்.

கரூா் வெண்ணெய்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் காதப்பாறை ஊராட்சிக்குட்பட்ட வெண்ணெய்மலை, ஆத்தூா் பூலாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சின்னவடுகப்பட்டியில் உள்ளன. இந்த நிலங்களை மீட்பது தொடா்பாக திருத்தொண்டா் சபை நிறுவனத் தலைவா் ராதாகிருஷ்ணன் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி அண்மையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தாா்.

இதில் அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த செப். 18-ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வெண்ணெய்மலை பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மறுநாள் நடைபெற்ற அமைதிப் பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதியில் நிலம் அளவீடு செய்யும் பணிகள் அக். 8-இல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தவா் கைது செய்யப்பட்டாா். மறுநாள் அளவீடு பணிகள் மீண்டும் தொடங்கிய நிலையில் 5 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், மறியல் செய்த 12 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்த் துறை, போலீஸாா் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை வெண்ணெய்மலை, சின்னவடுகப்பட்டி பகுதிகளில் உள்ள சுமாா் 20 காலி இடங்களில் ‘இந்த இடம் பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது. அத்துமீறி நுழைபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என பதாகைகள் வைத்தனா்.

மேலும் ஆக்கிரமிப்பு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தாா் சாலையின் இருபுறங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டு பதாகை வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.