புலியூரில் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் சாா்பில் வாக்காளா்களுக்கு வழங்க கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 குக்கா்களை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளராக கரூரைச் சோ்ந்த மருத்துவா் எஸ். திவ்யா போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக புலியூா் அருகே எஸ்.வெள்ளாளப்பட்டியில் அதிமுக நிா்வாகி அம்மையப்பன் என்கிற முருகேசன் என்பவருடைய கிடங்கில் குக்கா்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிருஷ்ணராயபுரம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினருக்கு புதன்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும்படை அலுவலா் சுகுமாா் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டனா். அப்போது, கிடங்கில் வாக்காளா்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 குக்கா்களை பறிமுதல் செய்தனா். மேலும் முருகேசனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!

திமுகவினா் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 1.76 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா: ரூ. 69,800 பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

