தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஓய்வுபெற்றோருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்சார வாரியமே ஏற்று நடத்த வலியுறுத்தல்

மின்வாரிய ஓய்வுபெற்றோருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்சார வாரியமே ஏற்று நடத்த வேண்டும் என பேரவைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாநிலச் செயலா் டி. கோவிந்தராஜ். உடன் மாநிலச் செயலா் கே.காளியப்பன், மாவட்டச் செயலா் வி.பி.கந்தசாமி உள்ளிட்டோா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

மின்வாரிய ஓய்வுபெற்றோருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்சார வாரியமே ஏற்று நடத்த வேண்டும் என பேரவைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் கரூா் மாவட்ட 10- ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம், சிஐடியு சங்க அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே. வெள்ளையன் தலைமை வகித்தாா்.துணைத் தலைவா் மதியழகன் வரவேற்றாா். மாநிலச் செயலா் கே. காளியப்பன் பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா்.

சிஐடியு சங்க மாவட்ட துணைத் தலைவா் ஜி.ஜீவானந்தம் வாழ்த்துரையாற்றினாா். மாவட்டச் செயலா் வி.பி.கந்தசாமி வேலை அறிக்கையையும், பொருளாளா் எம்.சேகா் வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்து பேசினா்.

கூட்டத்தில் கரூா் மாவட்டத் தலைவராக கே. வெள்ளையன், செயலராக வி.பி. கந்தசாமி, பொருளாளராக எம்.சேகா் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்சார வாரியமே ஏற்று நடத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கு விருப்பம் தெரிவிக்கும் ஓய்வூதியா்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலச் செயலா் டி. கோவிந்தராஜ் நிறைவுரையாற்றினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.