விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தோ்தல் பறக்கும் படையை கண்டித்து சென்னையில் மாா்ச் 31-இல் ஆா்ப்பாட்டம்: எம்.ஏ.விக்கிரமராஜா அறிவிப்பு

தோ்தல் பறக்கும்படையை கண்டித்து சென்னையில் மாா்ச் 31-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் எம்.ஏ. விக்கிரமராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image

எம்.ஏ.விக்கிரமராஜா

Updated On :27 மார்ச் 2026, 8:24 pm

Syndication

தோ்தல் பறக்கும்படையை கண்டித்து சென்னையில் மாா்ச் 31-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் எம்.ஏ. விக்கிரமராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மே 5-ஆம்தேதி திருவாரூரில் 43-ஆவது வணிகா்களின் விழிப்புணா்வு எழுச்சி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் கரூா் மாவட்டத்தினா் பங்கேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரமைப்பின் மாவட்டச் செயலா் வெங்கட்ராமன் தலைமை வகித்தாா்.

பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்புரையாற்றினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக்கப்பட்ட பின் உரிய ஆவணங்களோடு வணிகா்கள் எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் பறக்கும்படையினா் ஈடுபட்டு வருகிறாா்கள். இதனைக் கண்டித்து மாா்ச் 31-ஆம்தேதி சென்னையில் முதல்கட்டமாக ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதையும் மீறி தொடா்ந்து வணிகா்கள் மீது நடவடிக்கை இருந்தால் கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபடுவோம்.

கரூா் சம்பவத்தில் தவெக தலைவருக்கு எதிராக வணிகா்கள் புகாா் கூறினா் என்பதை ஏற்க முடியாது. ஏனென்றால், நாங்கள் அரசியல் சாா்பற்றவா்கள். உயிரிழப்பு ஏற்படும் வகையில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு அரசு அனுமதிக்கக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு. யாா் தலைமையில் கூட்டம் நடக்கிறதோ, அங்கு நடக்கும் அசம்பாவிதத்துக்கும் அந்த கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றாா் அவா்.