தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சிறப்பான வாழ்க்கைக்கு "கணவன், மனைவி உறவு சீராக இருக்க வேண்டும்'

சிறப்பான வாழ்க்கைக்கு கணவன், மனைவி உறவு சீராக இருக்க வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:15 am

சிறப்பான வாழ்க்கைக்கு கணவன், மனைவி உறவு சீராக இருக்க வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி.
பெரம்பலூர் பாலக்கரையில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் அறிவுத் திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:  
பெண்ணின் துணையில்லாமல் யாரும் இல்லை. ஆணின் வாழ்க்கையில், பெண் வாழ்க்கைத் துணையாக வந்த பிறகே அவ்வாழ்க்கை இறைநிலை நோக்கிய பயணத்தில் அர்த்தமுள்ளதாகிறது. 
குடும்ப வாழ்க்கையில், இன்ப துன்பங்களில் பங்குகொண்டு வாழ்வைச் சீரமைத்து வாழ்வதற்கு, கணவன்- மனைவி உறவு சீராக இருக்க வேண்டும். அந்த இரு ஆன்மாவும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். கருத்து வேறுபாடு, பிணக்கு இல்லாமல் என்றும் மாறாத நட்போடு வாழ்வது அவசியமாகும். எந்தவொரு மனிதனும் பெண்மையின் துணை இல்லாமல் வாழ்வதில்லை.
அதற்காகவே தம்பதியர் ஒருவரை ஒருவர் தினந்தோறும் வாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாழ்க வளமுடன் என்னும் அற்புத மந்திரத்தை ஆசான் வழங்கியுள்ளார். அவ்வாறு வாழ்த்தி, அதன் இனிமையை உணர்ந்து மனைவியை மதித்து போற்றிடும் விதத்தில் கொண்டாடும் விழாவே மனைவி நல வேட்பு விழா என்றார் அழகிரிசாமி.
பின்னர், மனவளக்கலை பேராசிரியர் இல. தியாகராஜன் அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து, மனவளக்கலை பேராசிரியர் ராதாலட்சுமி - தியாகராஜன் தம்பதியர், மனைவி நல வேட்பு விழா செய்முறை நடத்தினர். விழாவுக்கு வந்திருந்த தம்பதியர் காந்தப் பரிமாற்றத் தவம், அருள்காப்பு செய்து கொண்டனர். 
பெரம்பலூர் மனவளக்கலை பேராசிரியர் சு. ஹேமலதா, பேராசிரியர் புவனேஸ்வரி, 100க்கும் மேற்பட்ட தம்பதியர்கள் பங்கேற்றனர். முன்னதாக, அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செள.சந்திரசேகரன் வரவேற்றார். பொருளாளர் கு.கருப்பையா நன்றி கூறினார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.