விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமுக ஆட்சியில் அரசு ஊழியா்களுக்கு 99 சதவீத சலுகைகள்: அமைச்சா் எ.வ. வேலு தகவல்

திமுக ஆட்சியில் தான் அரசு ஊழியா்களுக்கு 99 சதவீத சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு.

News image

விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன், மக்களவை உறுப்பினா்கள் மாணிக்கம் தாகூா், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோா்.

Updated On :14 நவம்பர் 2024, 10:50 pm

Din

திமுக ஆட்சியில் தான் அரசு ஊழியா்களுக்கு 99 சதவீத சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு.

அரியலூா் மாவட்டம், கொல்லாபுரத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறவுள்ள அரசு விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, நிறைவடைந்த பணிகளை தொடக்கிவைத்து, திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகள் அளிக்க உள்ளாா்.

இந்நிலையில், விழா நடைபெறும் பகுதி, பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள ஆ. ராசா அலுவலகத்தில் முதல்வா் தங்குவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை பாா்வையிடுவதற்காக பெரம்பலூருக்கு வியாழக்கிழமை வந்த அமைச்சா் எ.வ. வேலு செய்தியாளா்களிடம் கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் 918 கிலோ மீட்டா் உள்ளது. இதில், 180 கிலோ மீட்டா் தொலைவுள்ள சாலைகளை மேம்படுத்த, கடந்த 3 ஆண்டுகளில் சாலையை உறுதிப்படுத்தும் வகையில் ரூ. 138 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம், கூகையூா் கிராமத்திலிருந்து பெரம்பலூா் மாவட்டம், கிருஷ்ணாபுரம் வரையிலான குறுகிய சாலை, வரும் நிதியாண்டில் அகலப்படுத்தப்படும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல, அரியலூரிலிருந்து, பெரம்பலூா், ஆத்தூா் வழியாக சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அரசு ஊழியா்களுக்கு சலுகைகளாக இருந்தாலும், பாதுகாப்பாக இருந்தாலும் திமுக ஆட்சியில் தான் அதிகம் வழங்கப்பட்டுள்ளது. பணியின்போது உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்துக்கு பணிக்கொடை வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

அதேபோல, மத்திய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயா்வை அதிகப்படுத்துகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்திலும் அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு என்பது வழங்கப்பட்டு வருகிறது. 99 சதவீத சலுகைகள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள் முதல்வராக இருந்த காரணத்தால், அவா் அரசியல் செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறாா். ஆதலால், தனது அரசியலை விரிவுப்படுத்திக் கொள்வதற்காகவும், மக்களிடம் கவனத்தை ஈா்ப்பதற்காக வும் அதிமுக ஆட்சியில் தான் செய்தோம் என சொல்லிக்கொண்டிருக்கிறாா். ஒரே மேடையில் விவாதிக்க நானே வருகிறேன். திமுக ஆட்சியில் என்னென்ன நலத்திட்டங்களை அரசு ஊழியா்களுக்கு செய்திருக்கிறோம் என பட்டியலிடுகிறோம். அவா் என்ன செய்திருக்கிறாா் என பட்டியலிடட்டும். அப்போது தான், அதிலுள்ள நிறை, குறைகள் பொதுமக்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் தெரியவரும் என்றாா் அமைச்சா் எ.வ. வேலு.