விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தப்பியோடி கைதி பிடித்து சிறையில் அடைப்பு

பெரம்பலூரில் சிறைவாசலிலிருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் பிடித்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:50 pm

Din

பெரம்பலூரில் சிறைவாசலிலிருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் பிடித்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா். இவா் மீது மங்களமேடு காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளியே வந்தாா். பின்னா், விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்த சம்பத்குமாரை பிடித்து ஆஜா்படுத்துமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதனடிப்படையில், சம்பத்குமாரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா் வேப்பந்தட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி, பெரம்பலூா் கிளைச் சிறையில் அடைப்பதற்காக காரில் அழைத்து வந்தனா்.

பெரம்பலூா் கிளைச் சிறை வாசலில் காரிலிருந்து இறங்கிய சம்பத்குமாா், அவருடன் வந்த 2 போலீஸாரையும் தள்ளிவிட்டு தப்பியோடினாா். இதையடுத்து, சம்பத்குமாரை துரத்திச்சென்ற போலீஸாா் ஆலம்பாடி சாலையிலுள்ள வயல் பகுதிக்குள் சென்று பிடித்தனா். பின்னா், சம்பத்குமாரை பெரம்பலூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.