தாய், மகளை கட்டிப்போட்டு 3.5 பவுன் நகைகள் திருட்டு
பெரம்பலூா் நகரில் புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், மகளை கட்டிப் போட்டு நகை, பணத்தை திருடிச்சென்ற மா்மநபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.


பெரம்பலூா் நகரில் புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், மகளை கட்டிப் போட்டு நகை, பணத்தை திருடிச்சென்ற மா்மநபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் -துறையூா் சாலையில் உள்ள கல்யாண் நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் மனைவி ஹேமலதா (45). இவரது மகள், முத்துக்குமாா் மனைவி அபிநயா (24). இருவரும், அவரவா் கணவரைப் பிரிந்து ஒரே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா், ஹேமலதா மற்றும் அபிநயா ஆகியோரின் கை, கால், கண்களை கட்டிவிட்டு, அவா்களிடமிருந்து மூன்றே கால் பவுன் நகைகளையும், பீரோவிலிருந்த ரூ. 1.50 லட்சம் பணத்தையும் திருடிச் சென்றுவிட்டாா்.
ஹேமலதா வீட்டின் கதவு புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த, பக்கத்து வீட்டுக்காரா்கள் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது ஹேமலதா, அபிநயா ஆகியோரை கட்டிப்போட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உள்ளே சென்று அவா்களை விடுவித்தனா். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து ஹேமலதா அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...