கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கந்தர்வகோட்டையில் தீத்தடுப்பு ஒத்திகை

கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் முன்பாக கந்தர்வகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மூலமாக

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:51 am

DIN

கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் முன்பாக கந்தர்வகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மூலமாக விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் மருத்துவர்கள்,  நோயாளிகள் முன்பாக விபத்தில்லாமல் தீயை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும்,  விபத்தில் காயமடைந்தவர்களை எப்படி மீட்பது பற்றியும் விரிவாக செயல்விளக்கமளித்தனர். மேலும்,  தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு மூலமாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள்,  மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.