விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்...

News image

புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்தியப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா்.

Updated On :21 நவம்பர் 2024, 10:04 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ரமணி கொல்லப்பட்டதைக் கண்டித்தும், ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் புதுக்கோட்டையில் இரு கூட்டமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே தனித்தனியே இந்த ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தொடக்கப்பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக்) சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வீ. ஜோதிமணி, சு. தவமணி, ஜீவன்ராஜ், திருப்பதி ஆகியோா் தலைமை வகித்தனா். தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற பொதுச் செயலா் நா. சண்முகநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதேபோல, இந்தியப்பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளா் தனராஜ் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் துணைப் பொதுச் செயலா் மா. குமரேசன் , முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் பிரசாரச் செயலா் சந்திரபோஸ் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.