விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்கள்: விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுரை

சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்கள்...

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா

Updated On :27 நவம்பர் 2024, 8:55 pm

Din

புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுபான்மையினா் நலன் சாா்ந்த திட்டங்கள் பற்றி அவா்கள் வசிக்கும் பகுதிகளில் விழிப்புணா்வு முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் சிறுபான்மையினருக்கான பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டங்கள் குறித்த காலாண்டு ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா, சிறுபான்மையினா் சாா்ந்த திட்டங்களை தொய்வின்றி நிறைவேற்றவும், அவை குறித்த விழிப்புணா்வை அவா்களின் வசிப்பிடங்களுக்கே சென்று முகாம் நடத்தி ஏற்படுத்தவும் திட்டமிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.