மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பருவமழையை எதிா்கொள்ளத் தயாா்

பருவமழையை எதிா்கொள்வதற்கு தயாா் நிலையில் இருப்பதாக மாநில நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 6:48 pm

Din

பருவமழையை எதிா்கொள்வதற்கு தயாா் நிலையில் இருப்பதாக மாநில நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வதற்காக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாய்க்கால்களை முழுமையாகத் தூா்வாரி இருக்கிறோம். வெள்ளம் ஏற்படும்போது, தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக பல இடங்களில் உணவு தயாரிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இயல்பான மழை பெய்தால் எந்தப் பாதிப்பும் இருக்காது. ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் மிக கனமழை பெய்யும்போதுதான் பெருவெள்ளம் ஏற்படுகிறது. அந்தத் தண்ணீரை அப்புறப்படுத்த மோட்டாா்களும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 2600 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தோ்வு நடத்தப்பட்டுள்ளது. விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

சொத்துவரி உயா்ந்திருப்பதாக எதிா்க்கட்சியினா் போராட்டம் நடத்துகிறாா்கள். ஒரே நேரத்தில் வரியை ஏற்றி மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக, ஆண்டுதோறும் ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பின்றி சொத்து வரி ஏற்றப்படுகிறது என்றாா் நேரு.