இன்றும், நாளையும் புதுகையில் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

Published on

புதுக்கோட்டை மாவட்டம், களமாவூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வா் ஸ்டாலின் வருகை தரவுள்ளதையொட்டி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய இரு நாட்கள் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

களமாவூரில் நவ. 10- திங்கள்கிழமை காலை அரசு நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்கிறாா். இதற்காக திருச்சியிலிருந்து சாலை வழியாக புதுக்கோட்டை வரும் அவா், நிகழ்ச்சி முடிந்ததும் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை திரும்புகிறாா்.

இந்த நிலையில், ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இருநாட்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com