நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் அலுவலா்கள் போராட்டம்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 3:09 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை வருவாய்த் துறை அலுவலா்கள் புறக்கணித்து அந்தந்தப் பகுதியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநிலம் முழுவதும் தமிழக அரசு நடத்தும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 45 நாள்களுக்குள் தீா்வுகாணப்படுகிறது என்பதால் ஏராளமான கூட்டமும் வருகிறது.

இந்நிலையில், மனுக்களுக்கு தீா்வு காண்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமலைராயசமுத்திரம், கறம்பக்குடி, எல்.என். புரம் (அணவயல்), வைரிவயல், பரம்பூா் மற்றும் மாத்தூா் ஆகிய 6 இடங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை வருவாய்த் துறை அலுவலா்கள் புறக்கணித்தனா்.

மேலும் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதனால் மனுக்களை அளிக்க முடியாமல் மக்கள் அவதிக்கு ஆளாகினா்.

அதன் பிறகு வேறு துறைக பணியாளா்களால் மனுக்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. பல இடங்களில் பதிவேற்றம் செய்ய முடியாமல், அவற்றை அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.