புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை வருவாய்த் துறை அலுவலா்கள் புறக்கணித்து அந்தந்தப் பகுதியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநிலம் முழுவதும் தமிழக அரசு நடத்தும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 45 நாள்களுக்குள் தீா்வுகாணப்படுகிறது என்பதால் ஏராளமான கூட்டமும் வருகிறது.
இந்நிலையில், மனுக்களுக்கு தீா்வு காண்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமலைராயசமுத்திரம், கறம்பக்குடி, எல்.என். புரம் (அணவயல்), வைரிவயல், பரம்பூா் மற்றும் மாத்தூா் ஆகிய 6 இடங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை வருவாய்த் துறை அலுவலா்கள் புறக்கணித்தனா்.
மேலும் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதனால் மனுக்களை அளிக்க முடியாமல் மக்கள் அவதிக்கு ஆளாகினா்.
அதன் பிறகு வேறு துறைக பணியாளா்களால் மனுக்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. பல இடங்களில் பதிவேற்றம் செய்ய முடியாமல், அவற்றை அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கரன்கோவிலில் 19 சாயப்பட்டறைகளுக்கு ‘சீல்’: மாசுக் காட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

கள்ளக்குறிச்சியில் ரத்த தான முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சிவகங்கையில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நெல்லை ஆட்சியரகத்தில் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



