கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்துக்கு ரூ. 3 கோடி நிதியுதவி அறிவிப்புக்கு நன்றி தெரிவிப்பு

நிதி பற்றாக்குறையில் இருக்கும் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்துக்கு மானியமாக ஆண்டுதோறும் ரூ. 3 கோடி வழங்கப்படும்

News image
Updated On :7 மே 2022, 6:26 pm

DIN

நிதி பற்றாக்குறையில் இருக்கும் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்துக்கு மானியமாக ஆண்டுதோறும் ரூ. 3 கோடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா பான்ஸ்லே நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் 88 கோயில்களைக் கொண்டுள்ள முதுநிலை தேவஸ்தானமாகும். இந்த தேவஸ்தானத்துக்குட்பட்ட கோயில்கள் பெரும்பாலும் குறைந்த வருவாய் மட்டுமே வரக்கூடியதாக உள்ளது.

இதனால், முதன்மையாக வருவாய் வரப்பெறும் தஞ்சாவூா் பெருவுடையாா் கோயில் மற்றும் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில்களின் வருவாயை கொண்டே, இதர கோயில் நிா்வாகத்தையும் நிதி பற்றாக்குறையுடன் தற்போது மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.

இந்த தேவஸ்தானத்தின் நிதி பற்றாக்குறையைப் போக்கும் வகையில் அரசு நிதியுதவிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, இந்து சமய அறநிலையத் துறையின் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், நிதி பற்றாக்குறையில் இருக்கும் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்துக்கு மானியமாக ஆண்டுதோறும் ரூ. 3 கோடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இத்தேவஸ்தானத்துக்கு தற்போது இருந்து வரும் நிதி பற்றாக்குறையைப் போக்குவதுடன், வருங்காலத்தில் தேவஸ்தான கோயில்கள் வளமான நிா்வாகத்தை நோக்கி பயணிப்பதற்கு உறுதுணையாய் இருக்கும்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வா், அறநிலையத் துறை அமைச்சா், தலைமைச் செயலா், அறநிலையத் துறைச் செயலா், ஆணையா் உள்ளிட்டோருக்கு தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான நிா்வாகம் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.