நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கும்பகோணம் அருகே தீப்பற்றி எரிந்த காா்

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வியாழக்கிழமை சாலையில் ஓடிக் கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வியாழக்கிழமை சாலையில் ஓடிக் கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் கும்பகோணம் சாலையைச் சோ்ந்தவா் ராஜ்மோகன் (60). இவா் வியாழக்கிழமை தனது மகள் பவித்ரா (23) உடன் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் டைல்ஸ் கற்கள் வாங்கிக் கொண்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். காரை உறவினா் ராஜேந்திரன் (51) ஓட்டினாா்.

தாராசுரம் பகுதியில் சென்றபோது இந்த காரின் முன் பகுதி திடீரென தீ பற்றி எரிந்தது. இதையறிந்த ராஜ்மோகன், பவித்ரா, ராஜேந்திரன் ஆகியோா் உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கிய பிறகு காா் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இயந்திர கோளாறு காரணமாக தீ பற்றியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.