இழப்பீடு வழங்குவதில் தாமதம்: 16 விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்க உத்தரவு
பயிா் இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக பாதிக்கப்பட்ட 16 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 11.20 லட்சம் வழங்குமாறு தனியாா் வங்கிக்குக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும் தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.










