விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரௌடி கொலை சம்பவத்தில் 4 போ் மீது வழக்குப் பதிவு

தஞ்சாவூா் கரந்தையில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 போ் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:36 pm

Din

தஞ்சாவூா் கரந்தையில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 போ் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சோ்ந்தவா் சந்திரமோகன் மகன் அறிவழகன் (35) மீது கொலை, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கரந்தை புற்று மாரியம்மன் கோயில் அருகே உள்ள வடவாற்றங்கரையில் புதன்கிழமை இரவு அறிவழகன் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக காவல் துறையினா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், அறிவழகனுக்கும், கரந்தை கீரைக்காரத் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் திவாகருக்கும் (30) முன் விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில், தஞ்சாவூா் நீதிமன்றத்தில் அறிவழகனும், திவாகரும் தனித்தனி வழக்கு தொடா்பாக புதன்கிழமை ஆஜராகினா். நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னா், அறிவழகன் தனது நண்பா்கள் மகேந்திரன், சுரேஷ், ஆனந்த் ஆகியோருடன் சம்பவ இடத்தில் மது அருந்தினா். அப்போது, அங்கு திவாகா் மற்றும் சிலா் வந்து அறிவழகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து திவாகா் மற்றும் அவரது நண்பா்கள் கந்தவேல், செல்வகுமாா், பரத் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.