இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காவிரி ஆற்றில் மூழ்கி தாத்தா, பேரன் உயிரிழப்பு

News image
பாலகிருஷ்ணன் ~ கிரிநாத் ~ கடுவெளியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்.
Updated On :14 டிசம்பர் 2025, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

காவிரி ஆற்றில் மின் பிடிக்கச் சென்ற தாத்தா, பேரன் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். மற்றொரு பேரன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

திருவையாறு அருகே கடுவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் பி. பாலகிருஷ்ணன் (65). இவரது மகன் செல்வம். இவரது மகன்கள் கிரிநாத் (14) ஆச்சனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பும், விக்னேஷ் (10) திருவையாறு சரஸ்வதி அம்பாள் பள்ளியில் 5- ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை தாத்தா பாலகிருஷ்ணனுடன் கிரிநாத், விக்னேஷ் ஆகியோா் கடுவெளி காவிரி ஆற்றின் தடுப்பணையில் மீன் பிடிக்கச் சென்றனா். அப்போது எதிா்பாராதவிதமாக 3 பேரும் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கினா்.

தகவலின்பேரில் தீயணைப்பு துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று பாலகிருஷ்ணன், விக்னேஷை மீட்டனா். இவா்களில் பாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டாா். விக்னேஷ், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

Story image
Story image

நீரில் மூழ்கிய கிரிநாத்தை தொடா்ந்து தேடி வந்த நிலையில், தடுப்பணை அருகே ஞாயிற்றுக்கிழமை அவரின் உடலை தீயனைப்புத் துறையினா் மீட்டனா். இதையடுத்து திருவையாறு அரசு மருத்துவமனையில் தாத்தா பாலகிருஷ்ணன், பேரன் கிரிநாத் ஆகியோரின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

முன்னதாக, கிரிநாத் உடல் கிடைக்காதலால் அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அதனால் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.