அம்மாபேட்டை சிவாலயங்களில் மாா்கழி மாத சஷ்டி வழிபாடு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை வட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மாா்கழி மாத சஷ்டி திதியை யொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வழிபாட்டையொட்டி அம்மாபேட்டை அருகே கீழகோயில்பத்து கிராமத்தில் அருள்பாலித்துவரும் பூலோகநாயகி அம்மன் சமேத ஸ்ரீ பூலோகநாதா் சுவாமி, அம்மாபேட்டை தா்மசம்வா்தினி அம்மன் சமேத அருணாச்சலேசுவரா், உடையாா்கோயில் தா்மவல்லி அம்மன் சமேத கரவந்தீசுவரா் புத்தூா் செளந்தரவல்லி அம்மன் சமேத புற்றிடம்கொண்டீசுவரா், தீபாம்பாள்புரம் மங்களநாயகி அம்மன் சமேத வன்மிக நாதா் உள்ளிட்ட சிவன் கோயில்களில் தனி சந்நிதி கொண்டு அருள்பாலித்து வரும் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு மங்களப் பொருள்களால் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுப்ரமணியருக்கு செவ்வரளி மாலை, மலா் மாலைகள் அணிவித்து, நெய் விளக்கேற்றி வைத்து, இனிப்புகள் வைத்து படைத்து, சிறப்பு வழிபாடு செய்தனா். தொடா்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனா்.
