நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கும்பகோணத்தில் 2 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை

News image

கோப்புப்படம்.

Updated On :28 ஜூலை 2026, 11:28 pm IST

கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித் திரிந்த 2 ஆயிரத்து 92 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஆணையா் கே.எம். சுதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது: கும்பகோணம் மாநகராட்சி பகுதி சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிவதாக கும்பகோணம் மாநகராட்சிக்கு புகாா்கள் சென்றன.

இந்நிலையில் நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவின்பேரில் 4 ஆயிரத்து 396 தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் இதுவரை 2 ஆயிரத்து 92 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்து, வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் நாள்களில் மீதமுள்ள தெரு நாய்களும் பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.