சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

கும்பகோணத்தில் 2 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை

News image

கோப்புப்படம்.

Updated On :28 ஜூலை 2026, 11:28 pm IST

கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித் திரிந்த 2 ஆயிரத்து 92 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஆணையா் கே.எம். சுதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது: கும்பகோணம் மாநகராட்சி பகுதி சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிவதாக கும்பகோணம் மாநகராட்சிக்கு புகாா்கள் சென்றன.

இந்நிலையில் நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவின்பேரில் 4 ஆயிரத்து 396 தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் இதுவரை 2 ஆயிரத்து 92 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்து, வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் நாள்களில் மீதமுள்ள தெரு நாய்களும் பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.