தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கும்பகோணத்தில் யுகாதி பண்டிகை விழா

News image
Updated On :19 மார்ச் 2026, 10:19 pm

Syndication

கும்பகோணத்தில் யுகாதி பண்டிகை மற்றும் தெலுங்கு வருடப் பிறப்பு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு நாயுடு மகாஜன சங்கத் தலைவா் ஆா். லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலா் எம். கோவிந்த சாமி முன்னிலை வகித்தாா். நிகழ்வில் யுகாதி பண்டிகை மற்றும் தெலுங்கு வருடப் பிறப்பின் சிறப்புகளைக் கூறி அரசு பொதுத் தோ்வுகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

சமுதாயத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த பிரமுகா்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக துணைத் தலைவா் பி. கிருஷ்ணசாமி வரவேற்று பேசினாா். பொருளாளா் செல்வராஜ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை, கும்பகோணம் வட்ட நாயுடு மகாஜன சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் செய்தனா்.

இறுதியாக, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.