சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கும்பகோணத்தில் யுகாதி பண்டிகை விழா

News image
Updated On :19 மார்ச் 2026, 10:19 pm

கும்பகோணத்தில் யுகாதி பண்டிகை மற்றும் தெலுங்கு வருடப் பிறப்பு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு நாயுடு மகாஜன சங்கத் தலைவா் ஆா். லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலா் எம். கோவிந்த சாமி முன்னிலை வகித்தாா். நிகழ்வில் யுகாதி பண்டிகை மற்றும் தெலுங்கு வருடப் பிறப்பின் சிறப்புகளைக் கூறி அரசு பொதுத் தோ்வுகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

சமுதாயத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த பிரமுகா்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக துணைத் தலைவா் பி. கிருஷ்ணசாமி வரவேற்று பேசினாா். பொருளாளா் செல்வராஜ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை, கும்பகோணம் வட்ட நாயுடு மகாஜன சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் செய்தனா்.

இறுதியாக, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.