மத்திய பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தில், போலீஸாரால் அவா்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைத்து பின்னா் அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு மற்றொரு ரயிலில் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சென்னை வந்த அவா்கள் அங்கிருந்து குருவாயூா் விரைவு ரயிலில் பயணித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை பகலில் வந்தடைந்தனா். அங்கு, சுமாா் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பயணச்சீட்டு எடுத்து பயணித்த நிலையில், எங்களது போராட்டத்தை தடுத்து நிறுத்திய மத்திய அரசு அவற்றை திரும்பத் தர வலியுறுத்தி, ரயில் நிலையத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் மேற்கொள்ள முயற்சித்தனா்.