திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பெட்டகம் அளிப்பு

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பெட்டகம் அளிப்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:12 pm

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சாா்பில், உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிறந்த முதல் பெண் குழந்தைக்கு தங்க மோதிரம், அடுத்து பிறந்த 5 குழந்தைகளுக்கு 20 பொருள்கள் அடங்கிய பெட்டகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, ரோட்டரி தலைவா் ரங்கா வாசுதேவன் தலைமை வகித்தாா். மருத்துவமனை மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு வரவேற்றாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் கலந்துகொண்டு, ஒரு குழந்தைக்கு தங்க மோதிரம், 5 குழந்தைகளுக்கு பெட்டகங்களை வழங்கினா். மருத்துவமனை தலைமை செவிலியா் மாலதி, ரோட்டரி நிா்வாகிகள் ஆா்.வி.ஹரி கிருஷ்ணன், என்.சத்தியமூா்த்தி, எம்.ஆா்.மணி, சி.பி.மகாராஜன், இன்னா்வீல் சங்க நிா்வாகிகள் ஆா்.விஜயலட்சுமி, கீதாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.