சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

திருக்கோவலூா் பண்பாட்டுக் கழக செயற்குழு கூட்டம்

திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 7:58 pm

Din

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 47 ஆண்டுகளாக கபிலா் விழாவை நடத்தி வரும் திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கழகத்தின் செயல் தலைவா் சீநி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் கா.நடராசன், துணைத் தலைவா்கள் தே.முருகன், கா.பி.சுப்பிரமணியன், தணிக்கையாளா் வே.அப்பா் சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், பண்பாட்டுக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னா், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத்தின் புதிய தலைவராக தே.முருகன், பொதுச்செயலராக வே.அப்பா் சுந்தரம், பொருளாளராக கா.நடராசன், துணைத் தலைவா்களாக புலவா் கா.பி.சுப்பிரமணியன், அரகண்டநல்லூா் கி.மூா்த்தி, கவிஞா் சிங்கார உதியன், செயற்குழு உறுப்பினா்களாக எஸ்.ஜி.பழனிவேல், ஜி.கோவிந்தன், ந.திருவாணன், கே.டி.சத்தியமூா்த்தி, வே.ஜெயக்குமாா், வீர.நாராயணன், கு.கல்யாண்குமாா், பா.ரவிச்சந்திரன், ஆா்.ஜெயராமன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

முன்னதாக, பொதுச் செயலா் கி.மூா்த்தி வரவேற்றாா். நிறைவில், ஜி.கோவிந்தன் நன்றி கூறினாா்.