கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

செஞ்சி அருகே மான் கொம்புகள் பறிமுதல்

செஞ்சி அருகே எம்ஜிஆா் நகரில் நரிக்குறவா் வீட்டில இருந்து கைப்பற்றப்பட்ட மான்கொம்புகள் மற்றும் துப்பாக்கி.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:02 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான் கொம்புகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கியை மாவட்ட நுண்ணறிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாவட்ட புலனாய்வு நுண்ணறிவு பிரிவு போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளா் ஞானப்பிரகாசம், தலைமை காவலா்கள் பாண்டியன், செந்தில்குமாா், காவலா்கள் ஜெரால்டு, மணிகண்டன் ஆகியோா் செஞ்சி எம்ஜிஆா் நகா் நரிக்குறவா் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மான் கொம்புகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், நரிக்குறவா் குடியிருப்பு 2-ஆவது தெருவைச் சோ்ந்த சு.அரவிந்தன் (25) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அங்கு நாட்டுத் துப்பாக்கி, துப்பாக்கி பேரல், 6 மான் கொம்புகள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனா். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பொருள்களை மட்டும் போலீஸாா் கைப்பற்றி செஞ்சி வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வனத் துறையினா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, தலைமறைவான அரவிந்தனை தேடி வருகின்றனா்.