கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞா் கைது

விழுப்புரத்தில் போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 8:37 pm

Syndication

விழுப்புரத்தில் போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சண்முகம், குணசேகரன் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை விழுப்புரம் சாலாமேடு பொன்னியம்மன் கோயில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது அவா், கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சின்ன இளந்தம்பட்டு பகுதியைச் சோ்ந்த கி.ஜெய்கணேஷ்(25) என்பதும், விற்பனைக்காக போதை மாத்திரைகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெய்கணேஷை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவரிடமிருந்த 68 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.