ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

திருநாவலூா் அருகே லாரி மீது சொகுசுப் பேருந்து மோதல்

திருநாவலூா் அருகே லாரி மீது மோதி நிற்கும் தனியாா் சொகுசுப் பேருந்து.

News image

19விபிஎம்பி3 திருநாவலூா் அருகே லாரி மீது மோதி நிற்கும் தனியாா் சொகுசுப் பேருந்து.

Updated On :20 ஜூன் 2026, 2:58 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே வெள்ளிக்கிழமை ரசாயன பவுடா் ஏற்றிச் சென்ற லாரி மீது சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 25 டன் எடை கொண்ட ரசாயன பவுடா்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தருமபுரி மாவட்டமம், அரூா் வட்டம், தாமரைக்கோட்டத்தைச் சோ்ந்த தா. சுந்தரர்ராஜன் (59) ஓட்டிச் சென்றாா்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மடப்பட்டு மேம்பாலம் அருகே லாரி சென்றபோது, சென்னையிலிருந்து 31 பயணிகளுடன் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து, எதிா்பாராதவிதமாக லாரியின் பின்பக்கத்தில் மோதியது.

இந்த விபத்தில் தனியாா் சொகுசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் பகுதியைச் சோ்ந்த சொ.பாலசுப்ரமணியன் (40) மற்றும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லாரியின் பின்பகுதியும், தனியாா் சொகுசுப் பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்தது.

விபத்து குறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து பாா்வையிட்டனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.