இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

உப்பனாற்றில் காணாமல் போன இளைஞர்களை தேடும் பணி தீவிரம்

கடலூர் அருகே உப்பனாற்றில் காணாமல் போன இரு இளைஞர்களை தேடும் பணி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:23 am

தினமணி

கடலூர் அருகே உப்பனாற்றில் காணாமல் போன இரு இளைஞர்களை தேடும் பணி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது.
 கடலூர் அருகே உள்ள நடுத்திட்டு அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர்கள் மாயவன் மகன் தருமன் (21), காசிதேவன் மகன் மகாபிரபு (18). இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களுடன் உப்பனாறுக்குச் சென்றுள்ளனர்.
 அப்போது, நண்பர்கள் ஆற்றைக் கடந்தபோது தருமன், மகாபிரபு இருவரும் மட்டும் மறுகரைக்கு வரவில்லையாம்.
 இதையடுத்து, காணாமல் போன இருவரையும் தேடும் பணியில் அவர்களது உறவினர்கள், கடலூர் சிப்காட் தீயணைப்பு மீட்புப் படையினர், முதுநகர் காவல் துறையினர் ஆகியோர் ஈடுபட்டனர். இந்தப் பணி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது. எனினும், காணாமல் போன இருவரையும் மீட்கும் பணியில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.