கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வீரட்டானேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.25 லட்சம்

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.5.25 லட்சத்தை செலுத்தி உள்ளனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:21 pm

Din

நெய்வேலி, ஜூலை 19: கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.5.25 லட்சத்தை செலுத்தி உள்ளனா்.

இந்தக் கோயில் கடந்த பிப்ரவரி மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை கோயிலிலுள்ள 4 உண்டியல்களும் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா்கள் பா.ஜெயசித்ரா (காட்டுமன்னாா்கோவில்), ஸ்ரீதேவி (பண்ருட்டி) தலைமையில், கோயில் செயல் அலுவலா் ப.தின்ஷா முன்னிலையில், மகளிா் சுயஉதவிக் குழுவினா் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், காணிக்கையாக பக்தா்கள் ரூ.5,25,120 செலுத்தியிருந்தது தெரியவந்தது.