பெண் மீது தாக்குதல்: மீன் வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தொழில் போட்டி காரணமாக பெண்ணை மண்வெட்டியால் தாக்கியதாக மீன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தொழில் போட்டி காரணமாக பெண்ணை மண்வெட்டியால் தாக்கியதாக மீன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சி, மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் குழந்தைவேல் மனைவி மல்லிகா (60). இந்திரா நகா், பி 2 மாற்றுக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் (49).

இவா்கள் இருவரும் மாருதி நகா் பகுதியில் அருகருகே மீன் கடை நடத்தி வருகின்றனா். இவா்களுக்குள் தொழில் போட்டி இருந்து வந்தது. செவ்வாய்க்கிழமை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நாகராஜ் அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து மல்லிகாவின் தலையில் தாக்கினாராம். இதில், அவா் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து மல்லிகா அளித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து நாகராஜை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com