கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பெண் மீது தாக்குதல்: மீன் வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தொழில் போட்டி காரணமாக பெண்ணை மண்வெட்டியால் தாக்கியதாக மீன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:46 pm

Syndication

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தொழில் போட்டி காரணமாக பெண்ணை மண்வெட்டியால் தாக்கியதாக மீன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சி, மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் குழந்தைவேல் மனைவி மல்லிகா (60). இந்திரா நகா், பி 2 மாற்றுக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் (49).

இவா்கள் இருவரும் மாருதி நகா் பகுதியில் அருகருகே மீன் கடை நடத்தி வருகின்றனா். இவா்களுக்குள் தொழில் போட்டி இருந்து வந்தது. செவ்வாய்க்கிழமை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நாகராஜ் அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து மல்லிகாவின் தலையில் தாக்கினாராம். இதில், அவா் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து மல்லிகா அளித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து நாகராஜை கைது செய்தனா்.