கடலூர்
மாடு மேய்த்த பெண்ணிடம் நகை பறிப்பு
கடலூா் அருகே ம மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் அணிந்திருந்த தங்க நகையை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.
கடலூா் அருகே ம மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் அணிந்திருந்த தங்க நகையை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.
கடலூா் வட்டம், தூக்கணாம்பாக்கம் காவல் சரகம், கலையூா் கிராமத்தில் வசிப்பவா் அருள் மனைவி சித்ரா(49). இவா், அதேபகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக நடந்து வந்த அடையாளம் தெரியாத நபா், சித்ரா கழுத்தில் இருந்த தாலியில் இருந்த காசு, வாழைபூ, குண்டுமணி உள்ளிட்ட 5 கிராம் எடையுள்ள தங்க நகைகளை பறித்துச் சென்றாராம்.
இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
