/

நவ.30-க்குள் மீன் பிடி படகுகளை பதிவு செய்ய வேண்டும்: கடலூா் ஆட்சியா்

News image
Updated On :23 நவம்பர் 2025, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டத்தில் அனைத்து மீன் பிடிப் படகுகளையும் நவ.30-க்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ன்படி, கடலூா் மாவட்ட கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீன் பிடி உரிமையாளா்கள் தங்கள் மீன் பிடி படகுகளை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த படகுகளுக்கு மட்டுமே மீன் பிடி உரிமம் பெற முடியும். பதிவு செய்யும்போது உயிா்காக்கும் கருவி அடங்கிய விவரம், எஞ்சின் விவரங்கள், மீன் பிடி படகு உரிமையாளரின் வீட்டு விலாச ஆதாரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் படகை பதிவு செய்ய வேண்டும். தவறினால், கடல் மீனவா்களுக்கான நலத் திட்டங்களிலிருந்து விலக்களிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.