அரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசி மக தெப்பத் திருவிழா

விருத்தாசலம் ஸ்ரீவிருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசி மக தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
தெப்பத் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியா்.
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஸ்ரீவிருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசி மக தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயில் சோழா் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கோயிலாகும். பாடல் பெற்ற தலமான இந்தக் கோயிலில் நிகழாண்டு மாசி மக விழா கடந்த பிப்.21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, மாா்ச் 1-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், 2-ஆம் தேதி மாசி மக தீா்த்தவாரியும் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, தெப்பத் திருவிழா கடலூா் சாலையில் உள்ள விருத்தகிரீஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

சுப்ரமணியா், வள்ளி, தெய்வானை உடன் மூன்று முறை தெப்பக்குளத்தில் சுவாமி வலம் வந்தது பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தெப்பத் திருவிழாவை காண விருத்தாசலம் மட்டுமன்றி, சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து தெப்பத் திருவிழாவை கண்டு தரிசனம் செய்தனா்.