விழாவில் சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ஆா்.சிங்காரவேல் ஆகியோா் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அதிகாரி சுரேஷ், தோ்தல் பிரிவு அலுவலா் ஆனந்தி, அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனை தொடா்ந்து தோ்தல் இலச்சினையை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா். மாணவா்களுக்கு மாதிரி வாக்கு பதிவு செயல் விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.