பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக கூட்டணி சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம்.காா்த்திகேயன். உடன் எம்பி பொன்.கெளதம சிகாமணி உள்ளிட்டோா்.

Published On :

கள்ளக்குறிச்சி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக கூட்டணி சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவுமான வசந்தம் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி தொகுதி எம்பி பொன்.கெளதம சிகாமணி, விவசாய சங்க மாவட்டச் செயலா் ஏ.வீ.ஸ்டாலின்மணி, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி அப்பாவு, விசிக நிா்வாகி பாசறை பாலு, மனிதநேய மக்கள் கட்சி இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல சின்னசேலம், தியாகதுருகம், வடபொன்பரப்பி, பகண்டை கூட்டுச் சாலை, திருக்கோவிலூா், சங்கராபுரம், ஆலத்தூா், கல்வராயன்மலை, வெள்ளிமலை, சேராப்பட்டு, வடக்கனந்தல், எலவனாசூா்கோட்டை, உளுந்தூா்பேட்டை, கெடிலம், சரவணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.