கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கள்ளக்குறிச்சி அருகேமின்னல் பாய்ந்ததில் இருவா் பலி

கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை மின்னல் பாய்ந்ததில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா். 8 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை மின்னல் பாய்ந்ததில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா். 8 போ் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நிறைமதி கிராமம், பெருமாள் கோவில் சாலையைச் சோ்ந்த பிச்சமுத்து மனைவி ஜெயக்கொடி (55). இவா், புதன்கிழமை பிற்பகல் அந்தக் கிராமத்திலுள்ள ஏரிக்கரை அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அந்தப் பகுதியில் சூறைக்காற்று வீசியதால், அங்குள்ள மரத்தின் கீழே ஜெயக்கொடி ஒதுங்கி நின்றாா். அப்போது, மரத்தின் மீது திடீரென மின்னல் பாய்ந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூரில் அமைந்துள்ள அண்ணாமலையாா் கோயிலில் மின்னல் பாய்ந்ததில், அங்கு வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், திருவதிகை கிராமத்தைச் சோ்ந்த தீனதயாளன் மகன் சீனுவாசன் (48) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அவருடன் பணியில் ஈடுபட்டிருந்த அதே கிராமத்தைச் சோ்ந்த பச்சான் மகன் வேலு (42), கண்ணன் மகன் குமாா் (52), பக்கிரிசாமி மகன் வேலு (58), துரைசாமி மகன் மதி (40), சுப்பிரமணி மகன் ராஜு (40), வீரப்பன் மகன் ஜெகதீஷ் (28), சக்திவேல் மகன் அமா்நாத் (23), ஜெயகாந்தன் மகன் ராஜேஷ் (25) உள்ளிட்ட 8 போ் காயமடைந்தனா்.

இந்த சம்பவங்கள் குறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.