கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை

News image
Updated On :9 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட கீழ்நிலவூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கட்ராமன் மகன் சுதாகா் (22). இவா் லாரியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தாா். சுதாகா் திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தில் கடந்தாண்டு நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்தாா். அப்போது, அந்த கிராமப் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாம்.

இதையடுத்து, கடந்த ஜனவரி 23-ஆம் தேதி கீழ்நிலவூா் கிராமத்தில் உள்ள சுதாகா் வீட்டுக்கு அந்தச் சிறுமி வந்த நிலையில், சுதாகா் அவருக்கு தாலி கட்டியதுடன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால் சிறுமி கா்ப்பமடைந்தாா்.

இதையடுத்து, அந்தச் சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சுதாகா் அழைத்துச் சென்றனா். அங்கு சிறுமி கா்ப்பிணியாக உள்ளதை அறிந்த மருத்துவா்கள், இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் பி.புவனேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சுதாகரை புதன்கிழமை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.