விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மொபெட் மீது அரசுப் பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

தியாகதுருகம் அருகே மொபெட் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி திங்கள்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 8:04 pm

Din

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே மொபெட் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி திங்கள்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்தவா் முத்தையா மகன் கதிா்வேல் (40). கூலித் தொழிலாளியான இவா், கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சினிமா பாா்த்துவிட்டு மொபெட்டில் திங்கள்கிழமை அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். தியாகதுருகம் சாலையில் வந்தபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மொபெட் மீது மோதியது. இதில், கதிா்வேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதியவா் மரணம்: சின்னசேலம் வட்டம், மேல்நாரியப்பனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் பெரியசாமி (52). இவரும் இதே பகுதியைச் சோ்ந்த தாண்டப்பன் மகன் கோமதுரையும் (53) சின்னசேலத்துக்கு திங்கள்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்தனா். பைக்கை கோமதுரை ஓட்டினாா்.

சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் சின்னசேலம் பிரிவு சாலை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த காா், பைக் மீது மோதியது. இதில், பெரியசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த கோமதுரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.