2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

மாற்றுத்திறனாளிகள் நூதன முறையில் ஆா்ப்பாட்டம்

ள்ளக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான

News image
கள்ளக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செய்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா்.
Updated On :1 டிசம்பர் 2025, 8:25 pm

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் கண்களில் கருப்பு துணிகளைக் கட்டிக் கொண்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு உணவை உத்தரவாதப்படுத்த மாதம் 35 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டும். ஆந்திர அரசைப் போன்று தமிழகத்தில் உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.6,000ஆக உயா்த்தி வழங்க வேண்டும். மாநில அளவிலான குறைதீா் கூட்டத்தை வருவாய் நிா்வாக ஆணையரை வைத்து நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் என்.வைத்திலிங்கம் தலைமை வகித்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட குழு நிா்வாகிகள் பங்கேற்றனா்.