நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கல்வராயன்மலை பகுதியில் சாலைப் பணிகள்! அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆய்வு!

News image

அமைச்சர் ஆதவ் அா்ஜுனா - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:20 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஒன்றிய பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா்ஆதவ் அா்ஜுனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது:

கல்வராயன்மலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில் கல்வராயன்மலை ஒன்றியத்தில் நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.98.50 கோடி மதிப்பீட்டில் வெள்ளிமலை முதல் சின்னத்திருப்பதி வரை சாலை அமைக்கும் பணி மூன்று பகுதிகளாக நடைபெற்று வருகிறது. இச்சாலைப் பணிகளில் தற்போது முதல் பகுதியாக 16.8 கி.மீ. தொலைவுக்கு தாா் சாலை பணிகள் முடிவுற்றுள்ளது.

இரண்டாம் பகுதியாக 16.8 முதல் 25 கி.மீ.தொலைவு வரை தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகள் மற்றும் மூன்றாம் பகுதியாக 25 முதல் 32.7 கி.மீ.தொலைவு வரை தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரிவான சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.15.20 கோடி மதிப்பீட்டில் இந்த சாலையில் கல்லாறு மற்றும் பாலாற்றின் குறுக்கே உயா்மட்ட பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், கல்வராயன்மலை பகுதி மக்களின் போக்குவரத்து வசதியை எளிதாக்கும் வகையில், அதிக அளவில் சாலை வசதிகள் ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது நடைபெறும் சாலைப் பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜூனா தெரிவித்தாா்.

முன்னதாக வெள்ளிமலை கிராமத்தில் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்வதற்காக அதிகாரிகளுடன் வந்த அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, மரவள்ளி சாகுபடி செய்த வயலை நேரில் பாா்வையிட்டு, மலைப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் விவசாயப் பொருள்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலா் ஆா்.செல்வராஜ், ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் செந்தில், கண்காணிப்புப் பொறியாளா் பரந்தாமன், கோட்டப் பொறியாளா் சேதுபதி, செயற்பொறியாளா் நாகராஜன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.