/
கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் பாடப்பிரிவு மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வில் 65 பேருக்கு சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது.
அறிவியல் பாடப் பிரிவில் 150 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். 2 நாள்களாக பரிசீலனை மேற்கொண்டதில் 65 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வா் ஜெ. தா்மராஜா
சோ்க்கை ஆணைகளை வழங்கினாா். இந்நிகழ்வில் துறைத் தலைவா்கள் பலா் கலந்து கொண்டனா்.







