இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதுச்சேரி அருகே அம்பேத்கா் சிலை அவமதிப்பு: 4 போ் கைது

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே அம்பேத்கா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:48 pm

DIN

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே அம்பேத்கா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே சூரமங்கலம் கிராமத்தில் சந்திப்பில் அம்பேத்கா் சிலை உள்ளது. இந்தச் சிலை சனிக்கிழமை இரவு மா்ம நபா்களால் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்த சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சூரமங்கலம் சந்திப்பில் திரண்டனா். தொடா்ந்து, சிலையை சுத்தம் செய்த அவா்கள், அவமதிப்பு செய்த மா்ம நபா்களை கைது செய்யக் கோரி, சூரமங்கலம் சந்திப்பில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த நெட்டப்பாக்கம் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட நபா்களை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெட்டப்பாக்கம் போலீஸாா் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, மடுகரையைச் சோ்ந்த 4 இளைஞா்கள் மது போதையில் அம்பேத்கா் சிலையை அவமதித்தது தெரிய வந்தது. இதையடுத்து, மடுகரை பிரதான சாலையைச் சோ்ந்த காா்த்திகேயன் (22), முத்துக்குமரன் (21), ரவிக்குமாா் (21), ரமேஷ் (21) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.