இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதுவையில் நவ.8 முதல் 1 - 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில்  நவம்பர் 8-ஆம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்.

News image
Updated On :27 அக்டோபர் 2021, 6:51 am

DIN

புதுச்சேரியில்  நவம்பர் 8-ஆம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பது சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டம் புதுச்சேரி கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.  

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து பேட்டியளித்த கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள்.

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து பேட்டியளித்த கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள்.

கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் மற்றும் கல்வித்துறை உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் கூறியதாவது,

புதுச்சேரியில் வரும் நவம்பர் 8-ஆம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும். அரை நாள் மட்டுமே வகுப்புக்கள் நடைபெறும். 

இதில், 1,3,5,7ம் வகுப்புகள் திங்கள், புதன் வெள்ளிக்கிழமையும்,  2,4,8 வகுப்புகள் செவ்,வியாழன்,சனிக்கிழமையும் இயங்கும். மதிய உணவு கிடையாது.

 நகர பகுதியில் காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரையும் கிராமப்புறங்களில் 9.30 முதல் மதியம் 1.30 வரை வகுப்புகள் நடக்கும். மாணவர்களுக்கு இலவச பேருந்தும் இயக்கப்படும்.  வருகை பதிவு கட்டாயமில்லை. வராத மாணவர்கள் ஆன்லைனில் படிக்கலாம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.