ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

புதுச்சேரியில் 15-18 வயதினருக்கு கரோனா தடுப்பூசி: முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் (15-18 வயது) மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

News image

புதுச்சேரியில் சிறுவர்களுக்கான கரோனோ தடுப்பூசி போடும் முகாமினை கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளியில் முதல்வர் என். ரங்கசாமி துவக்கி வைத்தார்.

Updated On :3 ஜனவரி 2022, 4:55 am

DIN

புதுச்சேரியில் (15-18 வயது) மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுவை மாநிலத்தில் 15-18 வயதுள்ள பள்ளி மாணவர்களுக்கு, கரோனா தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கரோனோ தடுப்பூசி போடும் முகாமினை (கோவாக்சின் தடுப்பூசி) புதுச்சேரி கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளியில் முதல்வர் என். ரங்கசாமி துவக்கி வைத்தார்.

அந்தப் பள்ளியில் தகுதியுள்ள 55 மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தில் 15 வயது முதல் 18 வயது உடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

Story image

இதற்காக 83 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் புதுச்சேரி சுகாதாரத்துறை கையிருப்பில் உள்ளது.

தொடர்ந்து இன்று முதல் பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். புதுவை மாநிலத்தில் ஏற்கனவே 13 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.